இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் 7 மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருக்கும் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் எப்போது ஏற்பட்டிராத ஒரு அசுர வளர்ச்சி.
10% இந்தியா
இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் எனில் இந்த 20 பேரின் மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர். ஆக ஒட்டுமொத்த இந்தியாவின் மதிப்பில் 10 சதவீதம் இவர்களின் கைகளில் உள்ளது.
6,400 கோடி ரூபாய்
நடப்பு ஆண்டில் முதல் 7 மாதத்தில் மட்டும் இந்தியாவின் டாப் 20 பில்லியனர்களில் 18 பேரின் சொத்து மதிப்புச் சராசரியாக 1 பில்லியன் டாலருக்கும் (6,400 கோடி ரூபாய்) அதிகமான அளவிற்கு உயர்ந்துள்ளது. சிலருக்கு 1 பில்லியனை விடவும் அதிகமான அளவிற்குச் சொத்துக்களைச் சேர்த்துள்ளனர்.
13 பில்லியன் டாலர்
20 பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7 மாதத்தில் 13 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
3-4 பில்லியன் டாலர்
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானிஷ விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, டிமார்ட் நிறுவன தலைவர் ஆர்கே தமனி ஆகியோரின் சொத்து மதிப்பு இந்த 7 மாதத்தில் 3-4 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.
திலீப் சங்வி
சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலீப் சங்வியின் சொத்து மதிப்பு தான் இந்த 7 மாதத்தில் உயர்வடையவில்லை. இப்பட்டியலில் இருக்கும் மற்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பு மற்றும் 7 மாதத்தில் கண்ட உயர்வு
No comments:
Post a Comment